Friday, December 2, 2011

பேரின்பம்

உன் அழகில் மயங்கிய

உயிர்கள் எத்தனை

காதல் கோர்வைகளை பேசி

உன்பேர் சொல்லி சிரிக்கும் தம்பதிகள்

நிறைமாத கர்பிணி தலைகோதி

உன்னை ரசிக்க சொல்லும் கணவன்

உன்னை கட்டிபிடிக்க என்னும்

குழந்தைகள்

உன்னை முத்தமிட துடிக்கும்

பருவ மங்கைகள்

உன் கைகோர்க்க விரைந்து

பறக்கும் இளங்காளையர்கள்

இந்த வரிசையில் இதோ நானும்

யார் நீ எனக்கு??

என் கன்னத்தில் முத்தமிட்ட தோழியா??

என் கண்ணீர் மறைத்த தோழனா??

உண்மை உணர்த்திய உறவா??

உன்னை எப்படி அழைக்க

அழகிய மலையின் மழைத்துளியே

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.